ranjith
செய்திகள்அரசியல்இலங்கை

தடைகளை கண்டு நாம் பின்வாங்க மாட்டோம்! – ரஞ்சித் மத்தும பண்டார

Share

” ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்படவுள்ள அரச எதிர்ப்பு போராட்டத்துக்கு அரசு அஞ்சிவிட்டது. அதனால்தான் போராட்டத்தை ஒடுக்குவதற்கு முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. நாம் பின்வாங்க மாட்டோம். திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” கொரோனாவால் நாட்டில் நாளாந்தம் 200 பேர் பலியானபோதுகூட கடும் கட்டுப்பாடுகளை அரசு உடன் விதிக்கவில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்தை தடுப்பதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர்தான் அரசிடம் கோரிக்கை விடுக்க வேண்டும். ஆனால் இந்த அரசு சுகாதார சேவைகள் பணிப்பாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டத்துக்கு அஞ்சியே அரசு இப்படி செயற்படுகின்றது. எது எப்படி இருந்தாலும் திட்டமிட்ட அடிப்படையில் எமது போராட்டம் நடைபெறும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...