OMugyjDW
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி மற்றும் எஃப்சிஐடியில் ராஜபக்ச குடும்பத்தினர்: ஷிரந்தி மற்றும் நாமல் இன்று முன்னிலை!

Share

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று (03) வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் ‘சிறிலிய சவிய’ (Siriliya) அமைப்பின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 27-ஆம் திகதி அவர் அழைக்கப்படிருந்த போதிலும், மருத்துவக் காரணங்களால் சமூகமளிக்கவில்லை. இதனால் இன்று (பெப். 03) காலை 9:30 மணியளவில் முன்னிலையாகுமாறு மீளவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாமல் ராஜபக்ச திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்புகள் மற்றும் ஏனைய சில குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் இன்று சிஐடி-யில் ஆஜராகியுள்ளார்.

இந்திய விஜயம் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்ட திகதியில் அவர் சமூகமளிக்காத நிலையில், இன்று முன்னிலையாகியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...