OMugyjDW
செய்திகள்அரசியல்இலங்கை

சிஐடி மற்றும் எஃப்சிஐடியில் ராஜபக்ச குடும்பத்தினர்: ஷிரந்தி மற்றும் நாமல் இன்று முன்னிலை!

Share

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் அவரது புதல்வர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் இன்று (03) வெவ்வேறு பொலிஸ் பிரிவுகளில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னிலையாகியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் பதவிக்காலத்தில் ‘சிறிலிய சவிய’ (Siriliya) அமைப்பின் கணக்கில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் மற்றும் சந்தேகத்திற்கிடமான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனவரி 27-ஆம் திகதி அவர் அழைக்கப்படிருந்த போதிலும், மருத்துவக் காரணங்களால் சமூகமளிக்கவில்லை. இதனால் இன்று (பெப். 03) காலை 9:30 மணியளவில் முன்னிலையாகுமாறு மீளவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

நாமல் ராஜபக்ச திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் ‘கெஹெல்பத்தர பத்மே’ என்பவருடனான தொடர்புகள் மற்றும் ஏனைய சில குற்றவியல் விசாரணைகள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் இன்று சிஐடி-யில் ஆஜராகியுள்ளார்.

இந்திய விஜயம் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்ட திகதியில் அவர் சமூகமளிக்காத நிலையில், இன்று முன்னிலையாகியுள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...