basil rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

சிகரெட் விலை அதிகரிப்பு!

Share

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஏனைய விடயங்கள்

  • பெருந்தோட்ட மக்களுக்கு புதிய குடியிருப்புகளை நிர்மாணிக்க 511 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • பொருட்களின் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு 31 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • வனஜீவரசிகள் பாதுகாப்புக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • சிறைக்கு கைதிகளின் உடல் நலனைப் பேணுவதற்கு 200 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு.
  • பொதுமக்கள் பாதுகாப்புக்காக பொலிஸ் திணைக்களத்துக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • அனைத்து வாக்காளர் தொகுதிக்கும் 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • நீர்ப்பாசன மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கு மேலும் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • தொழில் பயிற்சிக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • ரயில்வே பயணிகள் போக்குவரத்துக்கு மேலும் 2000 ரூபா மில்லியன் ஒதுக்கீடு.
  • விளையாட்டு மேம்பாட்டுக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • நீதித்துறை செயன்முறையை டிஜிட்டல் மயமாக்க மேலும் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • அரச நிறுவனங்களில் 2015 முதல் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டோருக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • கிராமப்புறங்களில் மதத்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • கர்ப்பிணிப்பெண்களுக்கான போஷாக்கு பொதியை 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு 300 ரூபா மில்லியன் ஒதுக்கீடு.
  • ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு 14,000க்கும் மேற்பட்ட வீட்டுக்கடைகளுக்கு 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • வீட்டு அடிப்படையிலான பொருளாதாரம் மற்றும் நலனுக்கு 31,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • அரச துறையில் பட்டதாரி அடிசேர்ப்பு – ஏற்கனவே பணியமர்த்தப்பட்டோருக்கு 2022 இல் நிரந்தர வேலைவாய்ப்பு – 7,600 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு.
  • வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி வழங்க 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • மது வரி அதிகரிப்பதால் 25 வீத வருமானம் பெற தீர்மானம்.
  • தொழில்முறை சங்கங்களுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க முதல் கட்டமாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க யோசனை.
  • மோட்டார் வாகன விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் விபத்தை ஏற்படுத்திய நபரிடமிருந்து கட்டணம் வசூலிப்பதற்கும், அதனை காப்பீடு மூலம் திரும்பிச் செலுத்துவதற்கும் வாய்ப்பு.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...