basil rajapaksa 1
செய்திகள்அரசியல்இலங்கை

சிகரெட் விலை அதிகரிப்பு!

Share

உடன் அமுலுக்கு வரும் வகையில் சிகரெட் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்படுகிறது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்தார்.

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்றையதினம் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஸவால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போதே மேற்படி தெரிவித்துள்ளார்.

இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டுள்ள ஏனைய விடயங்கள்

  • பெருந்தோட்ட மக்களுக்கு புதிய குடியிருப்புகளை நிர்மாணிக்க 511 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • பொருட்களின் விலை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டோருக்கு 31 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • வனஜீவரசிகள் பாதுகாப்புக்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • சிறைக்கு கைதிகளின் உடல் நலனைப் பேணுவதற்கு 200 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு.
  • பொதுமக்கள் பாதுகாப்புக்காக பொலிஸ் திணைக்களத்துக்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • அனைத்து வாக்காளர் தொகுதிக்கும் 4 பில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • நீர்ப்பாசன மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கு மேலும் 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • தொழில் பயிற்சிக்கு 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • ரயில்வே பயணிகள் போக்குவரத்துக்கு மேலும் 2000 ரூபா மில்லியன் ஒதுக்கீடு.
  • விளையாட்டு மேம்பாட்டுக்காக 3000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • நீதித்துறை செயன்முறையை டிஜிட்டல் மயமாக்க மேலும் 5000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • அரச நிறுவனங்களில் 2015 முதல் அரசியல் பழிவாங்கல்களால் பாதிக்கப்பட்டோருக்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • கிராமப்புறங்களில் மதத்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • கர்ப்பிணிப்பெண்களுக்கான போஷாக்கு பொதியை 24 மாதங்களுக்கு வழங்குவதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதற்கு 300 ரூபா மில்லியன் ஒதுக்கீடு.
  • ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுகளிலும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு 14,000க்கும் மேற்பட்ட வீட்டுக்கடைகளுக்கு 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • வீட்டு அடிப்படையிலான பொருளாதாரம் மற்றும் நலனுக்கு 31,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • அரச துறையில் பட்டதாரி அடிசேர்ப்பு – ஏற்கனவே பணியமர்த்தப்பட்டோருக்கு 2022 இல் நிரந்தர வேலைவாய்ப்பு – 7,600 மில்லியன் ரூபா மேலதிகமாக ஒதுக்கீடு.
  • வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு நிவாரணப்பொதி வழங்க 15,000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • மது வரி அதிகரிப்பதால் 25 வீத வருமானம் பெற தீர்மானம்.
  • தொழில்முறை சங்கங்களுக்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • ஓய்வூதிய முரண்பாட்டை தீர்க்க முதல் கட்டமாக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
  • துறைமுகங்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க யோசனை.
  • மோட்டார் வாகன விபத்துக்களைக் குறைக்கும் நோக்கில் விபத்தை ஏற்படுத்திய நபரிடமிருந்து கட்டணம் வசூலிப்பதற்கும், அதனை காப்பீடு மூலம் திரும்பிச் செலுத்துவதற்கும் வாய்ப்பு.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...