articles2Fsg3YovunY1Ol61UAPsYE
அரசியல்இலங்கைசெய்திகள்

புயல் நிவாரணம் குறித்து விவாதிக்க நாடாளுமன்ற அமர்வு: டிசம்பர் 18ஆம் திகதி கூட்டப்படுகிறது!

Share

சிறிலங்கா ஜனநாயக சோசலிசக் குடியரசின் நாடாளுமன்ற அமர்வு அடுத்த வாரம் டிசம்பர் 18ஆம் திகதி காலை 9.30 மணிக்குக் கூட்டப்படும் எனச் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன அறிவித்துள்ளார்.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கோரிக்கைக்கு அமைய இந்த அமர்வுக்குச் சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 16இற்கு அமைவாகச் சபாநாயகரால் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் (இலக்கம் 2466/33) நேற்று (டிசம்பர் 12) வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் வீசிய ‘டித்வா’ புயல் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அண்மையில் பிரதமரிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோரிக்கையும் அமர்வு கூட்டப்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...