IMG 4676
இலங்கைசெய்திகள்

லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானிக்கு விடை: பட்டச் சான்றிதழ் பூதவுடலுக்கு சமர்ப்பிப்பு!

Share

அண்மையில் லுணுவில பகுதியில் நிவாரணப் பணிக்காகச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்த இலங்கை விமானப்படையின் விங் கமாண்டர் நிர்மல சியம்பலாபிட்டியின் பூதவுடலுக்கு, அவர் இன்று (டிசம்பர் 3) பெறவிருந்த பட்டச் சான்றிதழ், கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தரால் சமர்ப்பிக்கப்பட்டது.

மக்களுக்காக நிவாரணப் பணிகளில் ஈடுபடும் சந்தர்ப்பத்தில் விபத்துக்குள்ளாகித் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.

அவருடைய உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் பெறவிருந்த பட்டச் சான்றிதழ் அவருடைய பூதவுடலுக்குச் சமர்ப்பிக்கப்பட்டது.

அவரது சேவைகளைப் பாராட்டும் வகையில், நவம்பர் 30 ஆம் திகதி முதல் விங் கமாண்டர் பதவியில் இருந்து குரூப் கேப்டன் பதவிக்கு அவர் பதவி உயர்வு பெற்றார்.

25 69302a6375a42

தலைமை விமானியான 41 வயதான குரூப் கேப்டன் நிர்மல சியம்பலாபிட்டிய, 3,000 மணி நேரத்திற்கும் மேலாக விமானப் பயணம் செய்த அனுபவம் வாய்ந்த விமானி என்று இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த விமானியின் இறுதிக் கிரியைகள் நாளைய தினம் (டிசம்பர் 4, 2025) முழு விமானப்படை மரியாதையுடன் நடைபெறவுள்ளன.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...