nallaru03
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெள்ளத்தில் தத்தளிக்கும் யாழ் குடாநாடு (வீடியோ)

Share

யாழ்ப்பாணக் குடாநாட்டில் அதிக மழையின் காரணமாக நகரின் பெரும் பகுதி வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது.

வெள்ளநீர் தேங்கி நிற்பதன் காரணமாக யாழ்ப்பாணம் ஸ்டான்லி விதியானது பொதுமக்கள் போக்குவரத்திற்காக ஒரு வழி வீதியான பொலிசாரால் அறிவிக்கப்பட்டு வீதித்தடைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த இரு நாட்களாக குடாநாட்டில் அதிக மழை பொழிவதோடு, இன்று அதிகாலை முதல் கன மழை பெய்துவருகிறது. இதனால் நகரின் மத்தியில் உள்ள 43 குளங்களும் நிரம்பி வழிகின்றன.

இதேநேரம் யாழ். நகரின் மத்தியில் உள்ள ஸ்ரான்லி வீதி, கண்ணாபுரம், சோலைபுரம், கற்குளம், பொம்மைவெளி, நித்திய ஒளி, மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட மாநகர சபை பிரதேசங்கள் நீரில் மிதக்கின்றன.

யாழ்ப்பாணக் குடாநாட்டின் நகரின் மத்தி நீர் வழிந்தோடும் பிரதான இடங்கள் பல தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளமையினால் நீர் தேங்கி இருப்பதினால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.

இதேநேரம் யாழ்ப்பாணம் மாநகரில் கழிவு நீர் ஓடும் கால்வாய் வாய்க்கால் கலங்காம சீரமைக்கப்பட்டதன் காரணமாகவே இந்த நிலைமை ஏற்படுவதாக பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
07 2
செய்திகள்அரசியல்இலங்கை

ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத்தொடர்: பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்க இலங்கைக்கு மீண்டும் அழுத்தம்

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (UNHRC) 61-வது கூட்டத்தொடரில், இலங்கை...

06 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகத்தின் இடைநிறுத்தத்திற்கு எதிராக வழக்கு: மார்ச் 18-ல் விசாரணை

நாடாளுமன்றத்தின் முன்னாள் பிரதிச் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன, தனது பணி இடைநிறுத்தத்தை எதிர்த்துத் தாக்கல்...

05 2
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கில் அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: வங்கி மற்றும் இணைய சேவைகள் முடக்கம்

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள போர் சூழலுக்கு மத்தியில், உலகின் முன்னணி கிளவுட் சேவை வழங்குநரான அமேசான்...

04 2
செய்திகள்உலகம்

ஈரானின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோலஸ்தான் அரண்மனை சேதம்: யுனெஸ்கோ அமைப்பு கடும் கவலை

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அமைந்துள்ள உலகப் பாரம்பரியச் சின்னமான கோலஸ்தான் அரண்மனை (Golestan Palace), தற்போதைய...