5 6
இலங்கைசெய்திகள்

நெடுஞ்சாலை பகுதியை 10,000 ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கிய ராஜபக்ச குடும்பம்

Share

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சேவைப் பகுதியை ராஜபக்ச குடும்பத்தினர் 99 ஆண்டுகளுக்கு 10,000 ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜபக்ச குடும்பத்தின் நண்பர்கள் பல அங்கீகரிக்கப்பட்ட சேவைப் பகுதிகளை நிர்மாணிப்பதைத் தடுத்ததாகக் கூறியுள்ளார்.

அத்துடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்தின் போது பல முரண்பாடுகள் இருந்ததாகவும் பில்லியன் கணக்கான பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஆரம்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாத நுழைவுப் புள்ளிகளுடன் இரண்டு பரிமாற்றங்களை நிர்மாணித்ததில் முரண்பாடு இருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளையில் உள்ள கொடகமவிலிருந்து 05 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபுடுவா பரிமாற்றம் கொழும்பிற்குச் சென்று வருவதை மட்டுமே எளிதாக்குகிறது.

அத்துடன், பெலியத்தவிலிருந்து 06 கி.மீ தொலைவில் உள்ள பெடிகம பரிமாற்றமும் முரண்பாடுகளைக் கொண்டது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு பரிமாற்றத்தை நிர்மாணிக்க ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...