7 5
இலங்கைசெய்திகள்

இலங்கையில் இருந்து பெருமளவு வெளிநாட்டவர்கள் இன்று நாடு கடத்தல்

Share

இலங்கையில் கைது செய்யப்பட்ட 85 சீனப் பிரஜைகள் இன்று காலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இலங்கையில் தங்கியிருந்த போது சைபர் குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட 85 சீனப் பிரஜைகள், நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னர் இன்று நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இந்த சீனப் பிரஜைகள் 05 பேருந்துகளில் ஏற்றப்பட்டு, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, கடுமையான பாதுகாப்பின் கீழ் விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளனர்.

85 பொலிஸ் அதிகாரிகள், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் இந்த சீனப் பிரஜைகளுடன் விமானம் பயணித்தனர்.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL-880 என்ற சிறப்பு விமானம் இன்று அதிகாலை 01.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சீனாவின் குவாங்சோவுக்கு புறப்பட்டதை விமான நிலைய பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார்.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...