5 6
இலங்கைசெய்திகள்

நெடுஞ்சாலை பகுதியை 10,000 ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கிய ராஜபக்ச குடும்பம்

Share

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் சேவைப் பகுதியை ராஜபக்ச குடும்பத்தினர் 99 ஆண்டுகளுக்கு 10,000 ரூபாவுக்கு குத்தகைக்கு வழங்கியிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹித அபேகுணவர்தன மற்றும் அஜித் பி. பெரேரா ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ராஜபக்ச குடும்பத்தின் நண்பர்கள் பல அங்கீகரிக்கப்பட்ட சேவைப் பகுதிகளை நிர்மாணிப்பதைத் தடுத்ததாகக் கூறியுள்ளார்.

அத்துடன், தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானத்தின் போது பல முரண்பாடுகள் இருந்ததாகவும் பில்லியன் கணக்கான பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஆரம்பத் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லாத நுழைவுப் புள்ளிகளுடன் இரண்டு பரிமாற்றங்களை நிர்மாணித்ததில் முரண்பாடு இருந்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாத்தளையில் உள்ள கொடகமவிலிருந்து 05 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபுடுவா பரிமாற்றம் கொழும்பிற்குச் சென்று வருவதை மட்டுமே எளிதாக்குகிறது.

அத்துடன், பெலியத்தவிலிருந்து 06 கி.மீ தொலைவில் உள்ள பெடிகம பரிமாற்றமும் முரண்பாடுகளைக் கொண்டது என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஒரு பரிமாற்றத்தை நிர்மாணிக்க ரூ.10 மில்லியனுக்கும் அதிகமான தொகை செலவிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
death body
இலங்கை

கருங்குளவிக்கொட்டுக்கு இலக்கான முதியவர் மரணம்.

யாழ்ப்பாணம் புங்குடுதீவு 10ஆம் வட்டாரம், பகுதியினை சேர்ந்த கிறிஸ்தோத்திரம் பிரான்ஸிஸ் சேர்ச்சில் என்ற 67 வயதான...

mervin silva031
இலங்கை

வங்கி கணக்குகளில் மட்டும் இத்தனை கோடிகளா – மேர்வின் சில்வாவினால் இன்னும் பலருக்கு தலைவலி!

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள 600...

fl
இலங்கை

பேஸ் புக் காதல் காவல்துறை அதிகாரி உயிர்மாய்ப்பு!

நேற்று அதிகாலை, வலான ஊழல் தடுப்புப்பிரிவில் கடமையாற்றிய காவலதிகாரி ஒருவர் தனது சேவை துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு...

Namal 2
இலங்கை

நாமல் ராஜபக்ச விடுத்துள்ள சவால்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில்...