Capture 1
செய்திகள்இலங்கை

நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!!

Share

நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!!

அன்டிஜென் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

அவருக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கடந்த 31 ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என அவர் அறிவித்தபோதும் தமிழ் அரசுக் கட்சியால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...