Capture 1
செய்திகள்இலங்கை

நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!!

Share

நகரசபைத் தலைவர் கொரோனாவால் உயிரிழப்பு!!

அன்டிஜென் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் கோ.கருணானந்தராசா கொரோனாத் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக் குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

அவருக்கு பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் கொரோனாத் தொற்றுள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

இதையடுத்து, அவர் உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பயனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கடந்த 31 ஆம் திகதி நகர சபைத் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன் என அவர் அறிவித்தபோதும் தமிழ் அரசுக் கட்சியால் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...