28 11
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க ஆடைத் தொழிற்சாலை மூடப்பட்டமைக்காக காரணம் வெளியானது!

Share

பிரித்தானியாவின் ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட், கட்டுநாயக்கவில் இயங்கி வந்த தமது தொழிற்சாலையை, திடீரென மூடியமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ளது.

அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் காரணமாக, தமது தொழிற்சாலை பல ஆண்டுக்காகவே, இலாபமற்ற நிலையில் இயங்கி வந்ததாக, நெக்ஸ்டின் உற்பத்தித்துறை பணிப்பாளர் டேவிட் ரே தெரிவித்துள்ளார்.

எனவே இந்த தொழிற்சாலையை மூடுவது தவிர்க்க முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இலங்கையில் உள்ள தமது மேலும் இரண்டு தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை அடுத்து, தமது தொழில்களை இழந்துள்ள 1,400 தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக மண்டலத்தில் அமைந்துள்ள இந்த தொழிற்சாலை, கடந்த செவ்வாய்க்கிழமை மூடப்பட்டது.

அத்துடன் ஒரே இரவில் தொழில்களை இழந்த 1,416 ஊழியர்களுக்கு பணிநீக்கப் பொதிகளை வழங்குவதாகவும் நிறுவனம் உறுதியளித்துள்ளது.

எனினும், ஆலோசனை இல்லாமல் மூடப்பட்டது ஒரு கூட்டு ஒப்பந்தத்தை மீறுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

இலங்கையின் ஆடைத்தொழில்துறையில் சுமார் 350,000 தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.

இந்த தொழில்துறை மூலம், கடந்த ஆண்டு 4.76 பில்லியன் டொலர் வருமானத்தை இலங்கை பெற்றுக்கொண்டது.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...