29 9
இலங்கைசெய்திகள்

ஒரே சிறை அறையில் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும்

Share

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2 அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, முன்னாள் அமைச்சருடன் அவரும் அதே சிறைச்சாலை அறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவும் அதே சிறைச்சாலை பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அதற்கமைய, M2 இல் 11 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று மாலை சுமார் 6.00 மணியளவில் ரமித ரம்புக்வெல்ல சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் மருத்துவ உபகரணங்களுடன் சிறைச்சாலைக்கு வந்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து கேட்டபோது, ​​இரவில் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும் போது இந்தக் கருவியைப் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

எனினும் சிறை மருத்துவர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவர் அந்தக் கருவியை பயன்படுத்த அனுமதிக்கப்படுவார் என்று சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ரமித ரம்புக்வெல்லவின் உடல்நிலையை பரிசோதிக்க சிறைச்சாலை மருத்துவர் ஒருவர் சிறைச்சாலைக்கு வருகை தர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்ல, மூன்று ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் நேற்று கைது செய்யப்பட்டார்.

சம்பவங்கள் தொடர்பாக வாக்குமூலம் அளிக்க அவர் லஞ்ச ஒழிப்பு ஆணையத்திற்கு வந்தபோது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரமித ரம்புக்வெல்லவை கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி முன் ஆஜர்படுத்தியபோது, ​​சந்தேக நபரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

Share
தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...