18 2
இலங்கைசெய்திகள்

சஜித்தின் கூட்டத்தில் இருந்து இடைநடுவில் எழுந்து சென்ற பொதுமக்கள்

Share

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் இடைநடுவில் பொதுமக்கள் எழுந்து சென்றதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகளின் மே தினக் கூட்டம் நேற்றைய தினம்(01) தலவாக்கலை நகரில் நடைபெற்றது.

இதன் போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடைநடுவில் உரையாற்றினார். அவருக்குப்பின் இன்னும் பலர் உரையாற்றக் காத்திருந்தனர்.

எனினும் சஜித் பிரேமதாசவின் உரை முடிந்த கையோடு பொதுமக்கள் கூட்டம் நடைபெற்ற மைதானத்தை விட்டும் எழுந்து செல்லத் தொடங்கியுள்ளனர்.

இதன் காரணமாக அடுத்து உரையாற்ற வந்த கட்சியின் செயற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் துஷார இந்துனில் , பெரும் அசௌகரியத்தை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது.

அதனையடுத்து கூட்டத்தின் தொகுப்பாளர் ,கூட்டம் இன்னும் முடியவில்லை, எனவே பொதுமக்கள் வெளியேற வேண்டாம் என்று பல தடவைகள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தும் வெளியேறpய பொதுமக்களை நிறுத்த முடியாமல் போயுள்ளது. இதன் காரணமாக சஜித்தின் மே தினக் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
image 89
செய்திகள்உலகம்

பேஸ்புக் லைக் மற்றும் கமெண்ட் பட்டன்கள் 2026 பெப்ரவரி முதல் நிறுத்தப்படும்!

மெட்டா நிறுவனம், வெளிப்புற வலைத்தளங்களில் (Third-party websites) பயன்படுத்தப்படும் பிரபலமான பேஸ்புக் லைக் (Like) மற்றும்...

1762967383 Galle Prison 6
செய்திகள்இலங்கை

காலி சிறைச்சாலையை இடமாற்றம் செய்ய விவாதம்: நகரின் 4 ஏக்கர் வணிக நிலத்தை வளர்ச்சிக்குப் பயன்படுத்தத்…

காலி சிறைச்சாலையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து காலி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தில்...