13 2
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து வெற்றியடைந்த நாடுகள் கிடையாது

Share

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெற்றியடைந்த நாடுகள் உலகில் கிடையாது என ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 94 நாடுகள் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாகவும் இதில் 92 நாடுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பல நாடுகள் தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து வெற்றியடைந்த நாடுகள் கிடையாது | Imf Agreement Sucess Says Npp

தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்தினால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இந்த அரசாங்கம் மக்களின் கழுத்தை நெரிக்கும் என பலர் காத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பாதகம் இல்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டு மக்களின் வாழ்க்கை பூரண செழிப்படையவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
அருந்திக பெர்னாண்டோ
இலங்கை

CCIB இல் இருந்து வெளியேறினார் முன்னாள் அமைச்சர்.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையாகி இருந்தார். டுபாயிலிருந்து...

மேயர் எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ
இலங்கை

ராஜபக்சர்களின் மற்றுமொரு சகா உயிரிழப்பு – நீளும் மர்மங்கள்!

  நேற்றைய தினம், ராஜபக்சர்களின் மிகவும் நெருக்கமான அரசியல்வாதி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பில்...

Namal
இலங்கை

மீண்டும் உருவாகும் ராஜபக்சர்கள் யுகம் – பொதுவெளியில் முழங்கிய இந்திக அனுருத்த!

  ராஜபக்சர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மீண்டும் தோற்றுவிக்க இலங்கை மக்கள் தயாராகியுள்ளதாக பொதுஜன பெரமுன கட்சியின்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...