13 2
இலங்கைசெய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து வெற்றியடைந்த நாடுகள் கிடையாது

Share

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு வெற்றியடைந்த நாடுகள் உலகில் கிடையாது என ஆளும் கட்சியின் சிரேஸ்ட அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் சுமார் 94 நாடுகள் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ளதாகவும் இதில் 92 நாடுகள் தோல்வியடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாக இந்த நிலைமை நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட பல நாடுகள் தோல்வியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தம் செய்து வெற்றியடைந்த நாடுகள் கிடையாது | Imf Agreement Sucess Says Npp

தமது அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற போது இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் கீழ் ஏற்கனவே உள்வாங்கப்பட்டிருந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை அமுல்படுத்தினால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபவார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு இந்த அரசாங்கம் மக்களின் கழுத்தை நெரிக்கும் என பலர் காத்திருந்தனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு பாதகம் இல்லாத வகையில் சர்வதேச நாணய நிதியத்துடன் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செயற்பட்டு வருவதாக அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

தற்பொழுது நாட்டு மக்களின் வாழ்க்கை பூரண செழிப்படையவில்லை என்பதை ஒப்புக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...