8 1
இலங்கைசெய்திகள்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இனி யாழ்ப்பாணத்தில்..

Share

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடத்தும் திட்டத்துடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானமொன்றை உருவாக்கும் பாரிய எதிர்பார்ப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் முதலாம் தவணைக் காலம் பூர்த்தியாகும் முன்னதாக யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கட் போட்டியொன்றை நடத்த வேண்டும் என்பது தமது விருப்பம் என தெரிவித்துள்ளார்.

எமது தலைமுறையினர் போர் புரிந்ததாகவும் அடுத்த தலைமுறையினருக்கு போர் இல்லாத ஓர் நாட்டை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தினர் இலங்கையில் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த அரசாங்கம் தராதரம் பாராது குற்றச் செயல்களில் ஈடுபட்ட அனைவரையும் தண்டிக்கும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதிமொழி வழங்கியுள்ளார்.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...