2 54
இலங்கைசெய்திகள்

கணேமுல்ல சஞ்சீவவின் சிறையில் கையடக்க தொலைபேசி!

Share

கணேமுல்ல சஞ்சீவவின் சிறையில் கையடக்க தொலைபேசி!

நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதற்கு முன்பு கணேமுல்ல சஞ்சீவ தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறையில் இருந்து ஒரு கையடக்க தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பாக சிறைச்சாலை தரப்பு மேற்கொண்டு வரும் விசாரணைகளின்படி, குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அதிகாரிகள் உட்பட 15 பேரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைச்சாலை வட்டார தகவல்களின்படி, பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்புப் பணிக்குழு அதிகாரிகள் மற்றும் கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்ற அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விசாரணைகள் சிறைச்சாலைகளின் உதவி கண்காணிப்பாளரின் மேற்பார்வையின் கீழ் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு, கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீது நேற்று (26) நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பாதுகாப்புப் பிரிவினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.

நேற்று காலை, மினுவங்கொடை – பத்தடுவன பகுதியில், கெஹெல்பத்தர பத்மே என்ற குற்றக் கும்பல் உறுப்பினரின் பாடசாலை நண்பர் என்று நம்பப்படும் 36 வயது நபர் மீது அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது காலிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று கம்பஹா மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையவர் அல்ல என்றாலும், அவர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பதால் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு, அவரது கூட்டாளிகள், கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை பழிவாங்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் பகை தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், இன்றைய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.

இது குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...