de
செய்திகள்இலங்கை

பஸ்ஸில் பயணித்தவர் இருக்கையிலேயே உயிரிழப்பு!!

Share

பஸ்ஸில் பயணித்தவர் இருக்கையிலேயே உயிரிழப்பு!!

பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர் இருக்கையில் இருந்த நிலையில் இன்று மாலை
உயிரிழந்துள்ளார்.

ஹொரணையில் இருந்து பாணந்துறைக்கு பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண் 60 வயது மதிக்கத்தக்கவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் நித்திரை செய்கிறார் என நினைத்து பஸ் நடத்துநர் அந்தப் பெண்ணை எழுப்பிய போது, அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

அதையடுத்து அந்தப் பெணின் உடல் பாணந்துறை மருத்துவமனைக்கு பஸ் மூலமே எடுத்து செல்லப்பட்டு, மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுக
இலங்கை

செம்மணியில் இன்றைய நாளிலும் 09 எலும்பு கூடுகள் – மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள்!

இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழியின் 102ஆவது நாள் அகழ்வுப் பணிகள் தொடர்ச்சியாக...

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின்
இலங்கை

கஞ்சிபானி இம்ரானின் மாமா படுகொலை – வெளியான பரபரப்பான CCTV காட்சிகள்!

மாளிகாவத்தையில் படுகொலை செய்யப்பட்ட கஞ்சிபானி இம்ரானின் மாமா என்பவரை துப்பாக்கியால் சுடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன....

5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சசையில் இடம்பெற்ற மோசடி – முறைப்பாடு அளித்துள்ள பெற்றோர்கள்!

நேற்றைய தினம் நடைபெற்ற 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகத் தெரிவித்து...

சாகர காரியவசம்
இலங்கை

நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார் சாகர காரியவசம்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்தினை பிணையில் விடுவிக்கக் கடுவலை நீதவான்...