ttttt
செய்திகள்அரசியல்இலங்கை

நிலையான அபிவிருத்தியே நாட்டின் கொள்கைக் கட்டமைப்பு – கிளாஸ்கோ நகரில் ஜனாதிபதி உரை

Share

நிலையான அபிவிருத்தியே எமது கொள்கைக் கட்டமைப்பாகும். அதன்படி இயற்கைக்கு எதிராக செயற்படுவதை விடுத்து, அதனோடு இணைந்து செயற்பட வேண்டும். இதன் மூலம் நிலையான அபிவிருத்தியை அடிப்படையாகக் கொண்ட புதிய விவசாயப் புரட்சி ஒன்று உருவாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெரும் காலநிலை மாற்றம், என்ற தொனிப்பொருளின் கீழ் நடைபெறும் விசேட கருத்தரங்கில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நவீன, விஞ்ஞான பொறிமுறைகள் மற்றும் பண்டைய வழிமுறைகள் ஊடாக, சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத விவசாய உற்பத்திகளை அதிகரிப்பதே, தற்போது எமக்கு உள்ள சவாலாகக் காணப்படுகின்றது.

காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சாசனத்துக்கமைய, இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட தேசிய நிர்ணயங்கள் மற்றும் அபிலாஷைகள் நன்கு பிரதிபலிக்கின்றன.

இலங்கையில் விவசாயிகளிடையே, பல தசாப்தங்களாக சிறுநீரக நோய் நிலைமை பெரும் பிரச்சினையாக உள்ளது. இதற்கு மிக முக்கிய காரணமாக இரசாயனப் பசளையை அதிகளவில் பயன்படுத்துவதே காரணமாகும்.

இந்நிலையிலேயே இரசாயனப் பசளை இறக்குமதியைக் குறைப்பதற்கும், சேதன விவசாயத்தை அதிகளவில் ஊக்குவிப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. எதிர்கால சந்ததியினருக்காகவே இந்தப் பூமியின் பாதுகாவலர்களாக நாம் அனைவரும் இன்று வாழ்ந்து வருகின்றோம். இயலுமான வகையில் அதற்குப் பங்களித்து அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அவை எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப பரிமாற்றல்கள், திறன் அபிவிருத்தி, அபிவிருத்தி உதவிகள், முதலீடுகள் மற்றும் நிதி உதவிகள் உட்பட இயலுமான பங்களிப்புகளையும் அபிவிருத்தி அடைந்த நாடுகள் வழங்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

66

g

#srilanka

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
qWa3tdNG
செய்திகள்உலகம்

ரேபிஸ் பரவுவதைத் தடுக்க ஜகார்த்தாவில் நாய், பூனை, வௌவால் இறைச்சிக்குத் தடை!

இந்தோனேசியத் தலைநகர் ஜகார்த்தாவில் ரேபிஸ் (Rabies) நோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, நாய்,...

images 4 2
செய்திகள்உலகம்

எச்1பி விசா திட்டத்தில் பெருமளவு மோசடி;அமெரிக்கப் பொருளாதார நிபுணர் அதிர்ச்சித் தகவல்!

அமெரிக்காவின் பிரபலப் பொருளாதார நிபுணர் டேவ் பிராட் (Dave Brat), எச்1பி (H-1B) விசா திட்டத்தில்...

da00bfe0 1dd0 11ef 95bd a16a3f175cc2.jpg
செய்திகள்இலங்கை

பெங்களூரில் இணையவழிப் பாலியல் மிரட்டல்: இலங்கை மாணவரிடம் பணம் பறித்த இன்ஸ்டாகிராம் கும்பல்!

பெங்களூரில் கல்வி கற்கும் 24 வயதுடைய இலங்கை மாணவர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான நபரால்...

கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளது
செய்திகள்அரசியல்இலங்கை

வாழைச்சேனை சம்பவங்கள் பௌத்த-சிங்கள சமூகத்தைத் தூண்டும் சதி: ஞானசார தேரர் எச்சரிக்கை!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டமை போன்ற சம்பவங்கள்...