i9
செய்திகள்அரசியல்இலங்கை

முட்டிமோதிக் கொள்ளும் இலங்கை – சீனா

Share

ராஜபக்ச அரசுக்கு கைகொடுத்து வந்த சீனா தற்போது அவர்களின் கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது. –

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

சீன அரசால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக சர்வதேசத்தால் ராஜபக்ச அரசை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தெளிவாகின்றது.

ராஜபக்ச அரசு ஆட்சியை பொறுப்பேற்கும் போது சீனாவின் ஒத்துழைப்பு ராஜபக்சக்களுக்கு கிடைக்கப் பெற்றது.

அந்த ஒத்துழைப்பிற்கான நன்றியுணர்வை இப்போது அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது இரு நாட்டு நட்புறவில் பாரியதொரு நெருக்கடியைத் தோற்றுவிக்கும் வகையில் சேதனப்பசளை விவகாரம் காணப்படுகிறது. இதனை மையப்படுத்தியே மக்கள் வங்கியை சீனா கறுப்புப்பட்டியலிட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை இலங்கை இறையாண்மைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் செயல் எனவும் சீனாவின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் செயல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சீன உரத்தின் தரம் குறித்த சர்ச்சை சீனாவின் சினத்துக்கு காரணமாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் பல திட்டங்களை சீனா முன்னெடுத்துள்ளது. சீன நிதியில் இலங்கையில் முக்கிய பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கை சீனாவின் கடனுக்குள் சிக்கியுள்ளது. இதனால் இலங்கை மீது சீனா தனது அழுத்தத்தை பிரயோகின்றது.

அதற்கமைய நாட்டின் வெவ்வேறு முக்கிய இடங்களை சீனாவுக்கு வழங்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...