i9
செய்திகள்அரசியல்இலங்கை

முட்டிமோதிக் கொள்ளும் இலங்கை – சீனா

Share

ராஜபக்ச அரசுக்கு கைகொடுத்து வந்த சீனா தற்போது அவர்களின் கன்னத்தில் அடிக்க ஆரம்பித்துள்ளது. –

இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

சீன அரசால் மக்கள் வங்கி கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக சர்வதேசத்தால் ராஜபக்ச அரசை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை தெளிவாகின்றது.

ராஜபக்ச அரசு ஆட்சியை பொறுப்பேற்கும் போது சீனாவின் ஒத்துழைப்பு ராஜபக்சக்களுக்கு கிடைக்கப் பெற்றது.

அந்த ஒத்துழைப்பிற்கான நன்றியுணர்வை இப்போது அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தற்போது இரு நாட்டு நட்புறவில் பாரியதொரு நெருக்கடியைத் தோற்றுவிக்கும் வகையில் சேதனப்பசளை விவகாரம் காணப்படுகிறது. இதனை மையப்படுத்தியே மக்கள் வங்கியை சீனா கறுப்புப்பட்டியலிட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை இலங்கை இறையாண்மைக்கு கலங்கத்தை ஏற்படுத்தும் செயல் எனவும் சீனாவின் மேலாதிக்கத்தை வெளிப்படுத்தும் செயல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

சீன உரத்தின் தரம் குறித்த சர்ச்சை சீனாவின் சினத்துக்கு காரணமாகியுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கையில் பல திட்டங்களை சீனா முன்னெடுத்துள்ளது. சீன நிதியில் இலங்கையில் முக்கிய பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதனால் இலங்கை சீனாவின் கடனுக்குள் சிக்கியுள்ளது. இதனால் இலங்கை மீது சீனா தனது அழுத்தத்தை பிரயோகின்றது.

அதற்கமைய நாட்டின் வெவ்வேறு முக்கிய இடங்களை சீனாவுக்கு வழங்க வேண்டிய தேவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold price growth
இலங்கை

இன்றைய நாளில் உயர்வினை பதிவு செய்த தங்கத்தின் விலை.

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம்...

sajith premadasa
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள், இன்று பாராளுமன்றத்தில் வைத்து நம்பிக்கையில்லாத்...

Suresh Salley
இலங்கை

மீண்டும் விசாரணைக்கு வந்த சுரேஷ் சலே வழக்கு.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக , பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது...

body
இலங்கை

இரத்தினபுரியில் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!

  இரத்தினபுரி , கொடிகமுவவில் பகுதியில் தனியாக வசித்து வந்த 32 வயதான கமகே நிசான்ச...