2 49
இலங்கைசெய்திகள்

நாட்டில் உணவகங்களை மூட வேண்டிய நிலை – விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Share

இலங்கையின் (Srilanka) சந்தையில் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக உணவகங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக உணவக உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேங்காய், அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பலவற்றுக்கு தற்போது தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், எல்லா உணவுப் பொருட்களுக்கும் தேங்காய் பயன்படுத்தப்படுகிறது. தேங்காயின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

சில இடங்களில் அதிகூடிய விலைக்கு வாங்குவதற்குத் தேங்காய்கள் இல்லை.

எனவே இதற்கு உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உணவக உரிமையாளர்கள் கோரியுள்ளனர்.

இதேவேளை நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை உப்புத் தொழிற்துறையில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியாவிலிருந்து (India) இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெற்றிக் தொன் அடங்கிய முதலாவது தொகுதி உப்பு நேற்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த கால ஆட்சியாளர்களே நாட்டில் தற்போது நிலவும் அரிசி தட்டுப்பாடுக்கு காரணம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் (M.Jegatheeswaran) தெரிவித்துள்ளார்.

கடந்த காலத்தில் இருந்த அரசாங்கங்கள் நெல்லினை சேமித்து வைத்து உரிய பொறிமுறையின் கீழ் மக்களிற்கு அரிசியினை விநியோகிப்பதற்கான செயன்முறையினை மேற்கொண்டிருந்தால் இவ்வகையான தட்டுப்பாடுகளும் விலை அதிகரிப்பும் ஏற்பட்டிருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 18
செய்திகள்உலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் ட்ரோன் தாக்குதல்: வங்கதேச பிரஜை உயிரிழப்பு – இதுவரை 12 பேர் பலி!

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா (Fujairah) பகுதியில் வான் பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்ட ட்ரோன் ஒன்றின்...

Untitled 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மூத்த குடிமக்களின் உரிமைகள் மற்றும் கௌரவம் காக்கப்பட வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்!

இலங்கையின் மூத்த குடிமக்கள் அனைவரும் தங்களது உரிமைகள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு, பாதுகாப்பு, சுதந்திரம் மற்றும் ஆரோக்கியத்துடன்...

Untitled 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கள்ளச்சாராயச் சுற்றிவளைப்பு: 7 பொலிஸ் உத்தியோகத்தர்கள் குளவித் தாக்குதலில் காயம்!

நுவரெலியா மாவட்டம், கோட்மலை வேடமுல்ல ரம்பொடை பகுதியில் உள்ள வனக் காப்பகத்திற்குள் இயங்கி வந்த கள்ளச்சாராய...

Untitled 15
உலகம்செய்திகள்

வெள்ளை மாளிகை நடன மண்டபக் கட்டுமானத்திற்கு அமெரிக்க நீதிமன்றம் அதிரடித் தடை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் முன்னெடுத்து வரும் பல மில்லியன் டாலர் மதிப்பிலான...