3 41
இலங்கைசெய்திகள்

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

Share

பேராபத்தில் சிக்கப்போகும் சிறீதரன் : திடீரென மாற்றப்பட்ட மெய்ப்பாதுகாவலர்

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் (S. Shritharan) மெய்ப்பாதுகாவலர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை திட்டமிடப்பட்ட அரசியல் சதி என பிரித்தானிய அரசியல் ஆய்வாளர் தி.திபாகரன் (T.Thibakaran) சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “சிறீதரன் தமிழரசுக் கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கான சூழ்நிலை அதிகமாகவுள்ளது.

இந்தநிலையில், இதனை தடுக்க தற்போது அவருக்கு எதிராக நடத்தப்படும் சதிகளுக்கு எதிராக மக்களை திரட்டி தனக்கு நீதி கோரி அவர் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தால் அவரது அரசியல் நிலைநிறுத்தப்படும்.

கட்சி தன்னை புணர்நிர்மாணம் செய்வதற்கும், தனக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் சதி வேலைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதற்கான வாய்ப்பு மக்கள் போராட்டம் மட்டும் தான் அல்லது சட்ட ரீதியாக அவர் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...