13 22
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சரின் வாகனம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Share

முன்னாள் அமைச்சரின் வாகனம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா (Vijith Vijithamuni Soysa) பயன்படுத்திய ஜீப் ரக வாகனம் தொடர்பில் வலான ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஜீப் ரக வாகனம் கடந்த மாதம் ஹப்புத்தளை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமா என்பதை கண்டறிவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பண்டாரவளை (Bandarawela) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும் காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த விடயம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த விஜித் விஜயமுனி சொய்சா நேற்று முன்தினம் (14) வலான ஊழல் தடுப்பு பிரிவில் முன்னிலையானார்.

இரண்டு சட்டத்தரணிகளுடன் வலானை ஊழல் தடுப்பு பிரிவிற்கு சென்ற அவர், வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடன் திடீரென சுகவீனமுற்றதாக கூறி அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பிறிதொரு திகதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
592732937 1280508897442061 4469225105931887604 n
இலங்கை

அனர்த்த நிவாரண நிதியாக ரூ. 100 இலட்சம் நன்கொடை: இலங்கை தாவூதி போரா சமூகத்தினர் ஜனாதிபதிச் செயலரிடம் கையளிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டத்துடன் இணைந்ததாக,...

images 3
செய்திகள்உலகம்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல்: ஒரே வாரத்தில் 3 பேருக்குத் தூக்கு – இந்த ஆண்டு 17 மரண தண்டனைகள் நிறைவேற்றம்!

சிங்கப்பூரில் கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர். இதன் மூலம்...

images 2
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர்: பலி எண்ணிக்கை 70,100ஐ அண்மித்தது!

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 70,100-ஐ அண்மித்துள்ளதாக காஸா...

dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1
செய்திகள்உலகம்

இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும்...