13 22
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சரின் வாகனம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

Share

முன்னாள் அமைச்சரின் வாகனம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

முன்னாள் அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சா (Vijith Vijithamuni Soysa) பயன்படுத்திய ஜீப் ரக வாகனம் தொடர்பில் வலான ஊழல் தடுப்பு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த ஜீப் ரக வாகனம் கடந்த மாதம் ஹப்புத்தளை பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்ட நிலையில் இது ஒன்று சேர்க்கப்பட்ட வாகனமா என்பதை கண்டறிவதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் பண்டாரவளை (Bandarawela) நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வதற்கும் காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இந்த விடயம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக அழைக்கப்பட்டிருந்த விஜித் விஜயமுனி சொய்சா நேற்று முன்தினம் (14) வலான ஊழல் தடுப்பு பிரிவில் முன்னிலையானார்.

இரண்டு சட்டத்தரணிகளுடன் வலானை ஊழல் தடுப்பு பிரிவிற்கு சென்ற அவர், வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டவுடன் திடீரென சுகவீனமுற்றதாக கூறி அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் விஜித் விஜயமுனி சொய்சாவிடம் வாக்குமூலம் பெறுவதற்கு பிறிதொரு திகதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...