modi
செய்திகள்உலகம்

இத்தாலியில் மோடிக்கு அமோக வரவேற்பு

Share

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இத்தாலிக்கு சென்றவேளையில் அவருக்கு அமோக வரவேற்பு வழங்கபட்டுள்ளது.

இத்தாலி நாட்டில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அவர்கள் நேற்று டெல்லியில் இருந்து இத்தாலிக்கு புறப்பட்டார்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி சர்வதேச பொருளாதார விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்திய நேரப்படி 9.30 மணிக்கு அவர் இத்தாலி நாட்டுக்கு சென்றடைந்தார் .

விமான நிலையத்தில் அவருக்கு மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இத்தாலியில் வாழும் இந்தியர்கள் திரண்டு வந்து கைகளில் மூவர்ண கொடி ஏந்தியபடி பிரதமர் மோடியை வரவேற்றுள்ளனர்.

இதுகுறித்து இந்திய பிரதமர் மோடி வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ரோம் நகரில் தரை இறங்கி உள்ளேன் எனவும் இம் மாநாட்டில் சர்வதேச அளவில் முக்கிய வி‌ஷயங்கள் விவாதிக்கப்படும்.

ரோமில் எனது அடுத்த பயண திட்டங்கள் குறித்தும் ஆர்வமாக உள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியில் இன்றிலிருந்து 31-ந்தேதி வரை 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள போகிறார் .

கிறிஸ்தவர்களின் தலைவரான போப் ஆண்டவரையும் வாத்திகனில் பிரதமர் மோடி சந்திக்கவுள்ளார்.

அத்தோடு இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இங்கிலாந்து நாட்டுக்கு செல்கிறார்.

இங்கிலாந்து பிரதமர் போரிஸ்ஜான்சன் அழைப்பை ஏற்று அவர் அங்கு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 68
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காலி – தெலிக்கடையில் பயங்கரம்: ஆணும் பெண்ணும் வெட்டிக் கொலை – ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

காலி, தெலிக்கடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இன்று (ஏப்ரல் 03, 2026) அதிகாலை இடம்பெற்றதாகக் கூறப்படும்...

Untitled 67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைச் சுற்றுலாவில் 19.7% சரிவு: மார்ச் மாதத்தில் வருகை தந்த பயணிகளின் எண்ணிக்கை வெளியீடு!

இலங்கைச் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 2026 மார்ச் மாதத்தில்...

Untitled 66
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பா அரிசி தட்டுப்பாட்டுக்குத் தீர்வு: பொன்னி மற்றும் கீரி பொன்னி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி!

இலங்கையில் நிலவும் சம்பா மற்றும் கீரி சம்பா அரிசி தட்டுப்பாட்டைப் போக்கி, சந்தையை நிலைப்படுத்துவதற்காக விசேட...

Untitled 65
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிலாபத்தில் பாரிய இணையவழி நிதி மோசடி: 147 வெளிநாட்டுப் பிரஜைகள் அதிரடி கைது!

இலங்கையின் சிலாபம், இரணாவில பகுதியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்து, சர்வதேச ரீதியிலான ஒழுங்கமைக்கப்பட்ட...