20 24
இலங்கைசெய்திகள்

கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியா ஒதுக்கியுள்ள 2000 மில்லியன் ரூபாய்கள்

Share

கிழக்கின் அபிவிருத்திக்காக இந்தியா ஒதுக்கியுள்ள 2000 மில்லியன் ரூபாய்கள்

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் 33 அபிவிருத்தி திட்டங்களை செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மொத்தம் 2,371 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில் இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

கல்வி, சுகாதாரம், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றுலா மற்றும் சமூக அதிகாரமளித்தல் போன்ற முக்கிய துறைகளில் ஒதுக்கீடுகள் செலவிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நிதி ஒதுக்கீடுகளில் கல்விக்கு 315 மில்லியன், சுகாதாரத்திற்கு 780 மில்லியன், விவசாயத்திற்கு 620 மில்லியன் மற்றும் மீன்வளத்திற்கு 230 மில்லியன் ரூபாய்களும் உள்ளடங்குகின்றன.

அதன்படி, இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...