14 19
இலங்கைசெய்திகள்

வவுனியாவிலும் எலிக்காய்ச்சல்! சிகிச்சைக்காக யாழிற்கு மாற்றம்

Share

வவுனியாவிலும் எலிக்காய்ச்சல்! சிகிச்சைக்காக யாழிற்கு மாற்றம்

வவுனியாவில் (Vavuniya) எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் (16.12.2024) யாழ் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவருக்கு காய்ச்சல் சுகமாகாத காரணத்தால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவருக்கு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஆறுமுகம் கேதீஸ்வரன் (Arumugam Ketheeswaran) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...