14 19
இலங்கைசெய்திகள்

வவுனியாவிலும் எலிக்காய்ச்சல்! சிகிச்சைக்காக யாழிற்கு மாற்றம்

Share

வவுனியாவிலும் எலிக்காய்ச்சல்! சிகிச்சைக்காக யாழிற்கு மாற்றம்

வவுனியாவில் (Vavuniya) எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்றைய தினம் (16.12.2024) யாழ் போதனா வைத்தியசாலைக்கு (Teaching Hospital Jaffna) மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா, தாலிக்குளம் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் வவுனியா வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவருக்கு காய்ச்சல் சுகமாகாத காரணத்தால் மேலதிக சிகிச்சைக்காக அவர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு எலிக்காய்ச்சல் தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவருக்கு மேலதிக சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.

இதேவேளை யாழ் மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய ஆறுமுகம் கேதீஸ்வரன் (Arumugam Ketheeswaran) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...