15 16
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் அடுத்த அதிரடி : முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்

Share

அநுர அரசின் அடுத்த அதிரடி : முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் ஜனாதிபதிகளின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இதன்படி காவல்துறை அதிகாரிகளைத் தவிர, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பில் உள்ள அனைத்து ஆயுதப்படை உறுப்பினர்களும் அடுத்த வாரம் முதல் திரும்பப் பெறப்படுவார்கள்.

பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால(Ananda Wijepala) இதனைத் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (17) விசேட அறிக்கையொன்றை விடுத்து அவர் உரையாற்றியபோதே இதனைக் குறிப்பிட்டார்.

கடந்த 11 மாதங்களில் முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது மனைவிகளின் பாதுகாப்புக்காக 1,448 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் மகிந்த ராஜபக்சவின்(mahinda rajapaksa) பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட காவல்துறையினரில் 116 பேர் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...