sajith resign
செய்திகள்அரசியல்இலங்கை

ரஞ்சனுக்கு பொதுமன்னிப்பு வழங்குக! – சஜித் கோரிக்கை

Share

ஊழல், மோசடிகளுக்கு எதிராக துணிந்து போராடிய ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என மீண்டும் கேட்டுக்கொள்கின்றேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கு இன்று பயணம் மேற்கொண்ட சஜித் பிரேமதாச, ரஞ்சன் ராமநாயக்கவை சந்தித்து சுகநலம் விசாரித்தார். அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

” ரஞ்சன் ராமநாயக்க மோசடியில் ஈடுபடும் நபர் கிடையாது. தன்னிடம் உள்ளதைக் கூட மக்களுக்கு வழங்கிய மனிதாபிமானமுள்ளவரே அவர்.

ரஞ்சன் ராமநாயக்க உயர்கல்வி கற்று பட்டம் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயற்பட்டு வருகின்றார். அதற்கான சந்தர்ப்பத்தை அரசு ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் பல தடவைகள் கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். மீண்டும் அந்த கோரிக்கையை விடுக்கின்றேன்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 60
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தம்பலகமுவவில் அதிரடி: 2,000 லிட்டருக்கும் அதிகமான டீசல் பதுக்கிய இருவர் கைது!

திருகோணமலை, தம்பலகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொல்லிப்போத்தானா பகுதியில், எவ்வித சட்டபூர்வமான அனுமதிப்பத்திரமுமின்றிப் பெருமளவிலான டீசலைப்பதுக்கி வைத்திருந்த...

Untitled 59
உலகம்செய்திகள்

நிச்சயமாக, பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை உயர்வு மற்றும் மானியங்கள் குறித்த விரிவான செய்தி இதோ:

பாகிஸ்தானில் பெட்ரோல் விலை 43% அதிரடி உயர்வு: ஈரான் போரால் ஸ்தம்பித்தது பொருளாதாரம்! ஈரானில் நிலவும்...

Untitled 58
உலகம்செய்திகள்

ஈரான் மூத்த தலைவர் கமல்கராஸி இல்லம் மீது தாக்குதல்: அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரும் பின்னடைவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகளுக்கும் ஈரான் இராணுவத்திற்கும் இடையிலான போர் இன்று (ஏப்ரல் 03,...

Untitled 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கண்டி விபத்து சோகம்: சிகிச்சை பலனின்றி மற்றைய மாணவனும் உயிரிழப்பு!

கண்டி – திகானா வீதியில் பல்லேகெலே பகுதியில் நேற்று (ஏப்ரல் 02, 2026) அதிகாலை இடம்பெற்ற...