6 4
இலங்கைசெய்திகள்

ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Share

ஹிருணிகா தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மீது சுமத்தப்பட்டிருந்த அவமதிப்பு வழக்கிலிருந்து, அவரை நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தி ஹிருணிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை, மேன்முறையீட்டு நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது.

இந்தநிலையிலேயே குறித்த குற்றச்சாட்டுக்களில் இருந்து ஹிருணிகாவை விடுவிப்பதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

கல்கிஸ்ஸ நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பாக, ஊடகவியலாளர் சந்திப்பில் ஹிருணிகா தெரிவித்த கூற்றுக்கு எதிராகவே இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது.

எனினும் இது போன்ற கருத்துக்களை எதிர்வரும் காலங்களில் வெளியிடப் போவதில்லை என ஹிருணிகா பிரேமச்சந்திர தனது சட்டத்தரணி ஊடாக உறுதியளித்ததை அடுத்து, நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...