hirunika premachandra
செய்திகள்அரசியல்இலங்கை

‘பண்டோரா அக்கா’ – நிருபமா ராஜபக்சவுக்கு பெயர் சூட்டினார் ஹிருணிக்கா

Share

‘பண்டோரா’ ஆவணத்தில் பெயரிடப்பட்டுள்ள நிருபமா ராஜபக்சவை தற்போது எல்லோரும் ‘பண்டோரா அக்கா’ என்றே அழைக்கின்றனர் – என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” நிருபமா ராஜபக்ச ஒரு நாளைக்கு ஒரு லட்சம் ரூபா செலவளித்தால்கூட, அவர் பதுக்கிய பணம் 800 வருடங்களுக்கு போதுமானது. கொள்ளையடிப்பதற்காகவே அவர் அரசியலுக்கு வந்துள்ளார். அவரின் குடும்பமும் அப்படிதான். இங்குள்ள வளங்களை, பணத்தை சுருட்டிக்கொண்டு அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுவார்கள்.

2022 ஆம் ஆண்டுவரும்போது நாட்டில் பஞ்சம் ஏற்படும் என அன்றே நான் சொன்னேன். ஆனால் 2021 இலேயே அந்த நிலைமை ஏற்பட்டுவிட்டது. தற்போது மக்கள் கொடுப்பாவிகளைதான் எரிக்கின்றனர். இன்னும் சில நாட்களில் ஆட்சியாளர்களையே தாக்குவார்கள் என்பது உறுதி.

நாட்டை சீரழித்த பின்னர் ராஜபக்சக்கள் அமெரிக்கா சென்றுவிடுவார்கள். இது உறுதி. நான் சொல்வதை குறித்துவைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில் ராஜபக்சக்களை பற்றி எனக்கு நன்கு தெரியும்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...