2 46
இலங்கைசெய்திகள்

பிரதமர் ஹரிணியை பகிரங்கமாக விமர்சித்துள்ள ரணில்!

Share

பிரதமர் ஹரிணியை பகிரங்கமாக விமர்சித்துள்ள ரணில்!

அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு அதிகாரிகளின் அங்கீகாரம் அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) கூறியதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), அரசியலமைப்பு குறித்து பிரதமர் கற்றுக் கொள்ள விரும்பினால் அதனை கற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

 

குருணாகலை – பன்னல பிரதேசத்தில் வைத்து இன்று (29) முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு, அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக தாம் நியமித்த உதய ஆர்.செனவிரத்ன நிபுணர் குழுவில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவவும் அங்கம் வகித்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டு, அனைத்து அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து, அமைச்சரவையின் அங்கீகாரம், அமைச்சரவை தீர்மானம் மற்றும் அமைச்சரவைப் பத்திரம் என்பனவற்றைப் பெற்று முறையான முறையில் உரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...