2 46
இலங்கைசெய்திகள்

பிரதமர் ஹரிணியை பகிரங்கமாக விமர்சித்துள்ள ரணில்!

Share

பிரதமர் ஹரிணியை பகிரங்கமாக விமர்சித்துள்ள ரணில்!

அமைச்சரவையில் பணியாற்றுவதற்கு அதிகாரிகளின் அங்கீகாரம் அவசியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) கூறியதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe), அரசியலமைப்பு குறித்து பிரதமர் கற்றுக் கொள்ள விரும்பினால் அதனை கற்றுக்கொடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

 

குருணாகலை – பன்னல பிரதேசத்தில் வைத்து இன்று (29) முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

 

அத்தோடு, அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நீக்குவதற்காக தாம் நியமித்த உதய ஆர்.செனவிரத்ன நிபுணர் குழுவில் தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவவும் அங்கம் வகித்ததாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்கப்பட்டு, அனைத்து அதிகாரிகளுடனும் கலந்தாலோசித்து, அமைச்சரவையின் அங்கீகாரம், அமைச்சரவை தீர்மானம் மற்றும் அமைச்சரவைப் பத்திரம் என்பனவற்றைப் பெற்று முறையான முறையில் உரிய சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...