Basil Rajapaksa PM
செய்திகள்அரசியல்இலங்கை

கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் வியூகம்!

Share

கூட்டமைப்பின் கோட்டைகளை கைப்பற்ற பஸில் ராஜபக்ச வியூகம் வகுத்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசன்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என தகவல் வெளியாகியிருந்த நிலையில், அது தற்போது உறுதியாகியுள்ளது.

மொட்டு கூட்டணியின் சார்பில் முதல்வர் வேட்பாளராகவே அவர் களமிறக்கப்படலாம் எனவும், பட்ஜட் கூட்டத்தொடரின் பின்னர் பதவி விலகுவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிழக்கு மாகாண அரசியல் பிரமுகர்களான அதாவுல்லா, கருணா, ஹிஸ்புல்லா உட்பட பல தரப்புகளின் ஆதரவுடன் பிள்ளையான் களமிறங்கலாம் எனவும், இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுக்கு கிழக்கு தேர்தல் களம் சவால்மிக்கதாக காணப்படும் என ஊகம் வெளியிடப்பட்டுள்ளது. கூட்டமைப்புக்கான வாக்கு வங்கியை உடைப்பதற்காக உதிரிகளும் களமிறக்கப்படவுள்ளன.

பிள்ளையானை வைத்து பஸிலே தற்போது வியூகம் வகுத்துவருகின்றார். அதேவேளை, வடக்கு மாகாணத்திலும் முக்கிய புள்ளியொருவரை களமிறக்குவதற்கான பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FY0GVgzTw5z9g03mi2iHS
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொலன்னறுவையில் கொடூரம்: கோடரித் தாக்குதலுக்குள்ளான 17 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

பொலன்னறுவை மாவட்டம் தம்பால பகுதியில் பக்கத்து வீட்டு இளைஞனால் கோடரியால் தாக்கப்பட்ட 17 வயதுடைய பாடசாலை...

26 6982fe7a72190
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் விவகாரம்: பிரித்தானிய பிரபுக்கள் சபையிலிருந்து பீட்டர் மெண்டல்சன் அதிரடி விலகல்!

  பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சரும், அமெரிக்காவிற்கான முன்னாள் தூதருமான பீட்டர் மெண்டல்சன் (Peter Mandelson) மீது...

english lokshahi 2026 02 04 1vn53foh Mumbai
செய்திகள்இந்தியா

மும்பை விமான நிலையத்தில் நடுக்கம்: இரண்டு ஏர்பஸ் விமானங்கள் மோதி விபத்து!

இந்தியாவின் மிக முக்கியமான விமான நிலையங்களில் ஒன்றான மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான...

image 26ca8f03e9
செய்திகள்அரசியல்இலங்கை

இந்த அரசாங்கம் மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தது அல்ல – நம்பிக்கையூட்டும் வாசுதேவ நாணயக்கார!

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் அதன் பின்னணி குறித்து முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார நேற்று...