22 7
இலங்கைசெய்திகள்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 33 கோடி ரூபாய் செலவு

Share

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 33 கோடி ரூபாய் செலவு

தற்போது நாடாளுமன்றத்தில் இருந்து ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த உறுப்பினர்களின் உறவினர்களுக்காக 33 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, 424 பேருக்கான ஓய்வூதியம் செலுத்துவதற்காக இந்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த எண்ணிக்கையில் சமீபத்தில் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இணைக்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் இருந்து பெறப்பட்ட சமீபத்திய அறிக்கைகளின்படி, குறைந்தபட்சம் 5 வருட சேவையை பூர்த்தி செய்த ஒரு உறுப்பினருக்கு அனைத்து கொடுப்பனவுகளுடன் மாதம் 57,620 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.

நாடாளுமன்றத்தில் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் இருந்த உறுப்பினருக்கு அனைத்து கொடுப்பனவுகளுடன் வழங்கப்படும் மாதாந்த ஓய்வூதியம் 75,715 ரூபாய் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
லக்ஷ்மன் யாப்பா
இலங்கை

முன்னாள் அமைச்சர் மீது ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்!

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக, வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணத்தை...

nilam 1
இலங்கை

காணி அளவீட்டுக்கு எதிர்ப்பு வெளியிட்டு யாழில் இன்று போராட்டம்.

மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் படைத்துறைக்கு 25 ஏக்கர் வரையான காணி சுவீகரிப்பதற்கு எதிராக தற்போது...

crime 09
இலங்கை

பெண் மருத்துவரின் கொலைக்கு காரணம் என்ன? – நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட குற்றவாளிகள்.

தெல்தெனியவில் சடலமாக மீட்கப்பட்ட, பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு...

col.uni
இலங்கை

மூடப்படுகிறதா கொழும்பு பல்கலைக்கழகம்?

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களுக்கும் டெங்கு காய்ச்சல் பரவியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த,...