26 7
இலங்கைசெய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அதிருப்தியில்! தலதா அத்துகோரள

Share

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அதிருப்தியில்! தலதா அத்துகோரள

ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் அதிருப்தியில் இருப்பதாக அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

தமக்கு பல்வேறு வழிகளில் அநீதிகள் இழைக்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலர் இவ்வாறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிட்டதாகத் தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைவர் தங்களது கருத்துக்களுக்கு எந்த வகையிலும் செவிமடுப்பதில்லை . இதனால் தாம் கடும் அதிருப்தியடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியை பெண் என்ற ரீதியில் ஏற்றுக்கொள்ள தயார் என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

ஏற்பட்ட தவறுகளை திருத்திக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும், நாட்டின் பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
Missing Persons Nuwara Eliya
இலங்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.

நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, இன்று மாலை நேர நிலவரப்படி 581 குடும்பங்களைச்...

Displaced
இலங்கை

நுவரெலியாவில் தொடரும் கனமழை – தற்காலிக முகாம்களில் தஞ்சம் கோரிய மக்கள்.

நுவரெலியாவில் சீரற்ற வானிலை காரணமாக, பல தாழ்நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளதுடன், மரங்களும் முறிந்து விழுந்துள்ளதாக...

Ministry of Defence
இலங்கை

பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அவசர அறிவித்தல்.

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பாதுகாப்பு அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு...

Electricity bills
இலங்கை

மின்சார கட்டணம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 2026 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டிற்கான மின்சாரக் கட்டணங்களில் எவ்வித...