30 2
இலங்கைசெய்திகள்

மூன்று கோடி வட் வரி ஏய்ப்புச் செய்த நிறுவனப் பணிப்பாளர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை

Share

மூன்று கோடி வட் வரி ஏய்ப்புச் செய்த நிறுவனப் பணிப்பாளர்களுக்கு ஆறுமாத சிறைத்தண்டனை

மூன்று கோடி ரூபாவுக்கும் அதிகமான வட் வரியை ஏய்ப்புச் செய்த நிறுவனமொன்றின் பணிப்பாளர்கள் இருவருக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கெஸ்பேவ பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றின் பணிப்பாளர்களான கணவன் – மனைவி ஆகியோருக்கே கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு குறித்த தம்பதி தமக்குச் சொந்தமான நிறுவனம் ஒன்றின் மூலமாக செலுத்தப்பட வேண்டிய வட் வரி சுமார் மூன்று கோடி ரூபாவைச் செலுத்தாமல் வரி ஏய்ப்புச் செய்துள்ளனர்.

அதற்கு எதிராக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் கடந்த 2018ஆம் ஆண்டு குறித்த தம்பதியினருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில் மூன்று கோடி ரூபா வரியை செலுத்த மேலும் ஐந்து வருட கால அவகாசம் கோரப்பட்ட போதும் அதனை ஏற்றுக் கொள்ளாத நீதிமன்றம் மேற்குறித்த தம்பதிக்கு ஆறுமாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...