elec
இலங்கைஅரசியல்செய்திகள்

மின் கட்டணங்களுக்கு சலுகை?

Share

மின் கட்டணங்களுக்கான சலுகைக்காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா ஹொட்டல்களுக்கான மின் கட்டணத்துக்கு நிவாரணம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குறித்த சலுகை மேலும் சிறிது காலத்துக்கு நீடிக்கப்படவுள்ளது.

இவ் விடயம் தொடர்பில், மின்சாரத்துறை அமைச்சருடன் விரைவில் கலந்துரையாடப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும், சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஹொட்டல்களுக்கு மின்கட்டணம் செலுத்துவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அக் கால அவகாசம் கடந்த செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்துள்ளது.

இந்த நிலையில், மின் கட்டண சலுகை தொடர்பில்,ஹொட்டல் உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். கொரோனாத் தொற்று பரவல் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனை வழமைக்குக் கொண்டுவர மேலும் சில மாதங்கள் தேவை – என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்திலிருந்து காணாமல் போன இரு மீனவர்கள் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் மீட்பு!

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை ஊரணி கடற்பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன இரண்டு...

21 4
செய்திகள்அரசியல்இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: சுரேஷ் சலே மூன்றாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டார்!

அரச புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானியும், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலுமான சுரேஷ் சலே, உயிர்த்த...

20 3
செய்திகள்உலகம்

அஸர்பைஜான் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான நிலையம் மற்றும் பாடசாலை இலக்கு!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் அண்டை நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில், அஸர்பைஜானின் கட்டுப்பாட்டில்...

19 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

போலி உறுதிப்பத்திரம் தயாரித்த பெண் சட்டத்தரணிக்கு 12 ஆண்டு சிறை: கொழும்பு மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கொழும்பு பொரளைப் பகுதியில் உள்ள பெறுமதியான காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட பெண்...