india
செய்திகள்இந்தியா

இந்தியாவில் தொடரும் கொலைகள்…..

Share

விவசாயிகளால் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தின் அருகே இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது.

இந்தியாவின் அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டலியில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அச்சடலத்தில் இடதுகை மணிக்கட்டு வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தடுப்பு வேலியில் ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையிலேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கு எல்லையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்ட பகுதிக்கு அருகில் இச்சடலம் மீட்கப்படுள்ளது.

மேலும் இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த கொடூர கொலை சீக்கியக் குழுவான நிஹாங்ஸ்களால் நடத்தப்பட்டிருக்குமென சந்தேகிக்கப்படுகின்றது.

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி, அந்தஇளைஞரை நிஹாங்ஸ் குழு அடித்து கொன்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் சோனிபட் பொலிஸார் அந்த சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இக் கொலை தொடர்பில் பொலிஸ் தரப்பில் எதுவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 10
உலகம்செய்திகள்

ஈரானுடனான போர்: முதல் ஆறு நாட்களில் 11 பில்லியன் டாலர் செலவு – அமெரிக்க செனட்டர் தகவல்!

ஈரானுடனான மோதலின் முதல் ஆறு நாட்களில் அமெரிக்காவிற்கு குறைந்தது 11 பில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகியுள்ளதாக...

21 10
செய்திகள்உலகம்

பூமியின் வளிமண்டலத்தை நோக்கி வரும் நாசாவின் ‘வான் ஆலன் ப்ரோப் ஏ’ விண்கலம்!

2012-ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட, 600 கிலோ (1,300 பவுண்டுகள்) எடையுள்ள நாசாவின் ‘வான் ஆலன்...

20 11
செய்திகள்அரசியல்இலங்கை

எரிபொருள் விலை உயர்வு: அரசாங்கத்திற்கு ரூ. 7.1 பில்லியன் கூடுதல் வருமானம் – முஜிபுர் ரஹ்மான் குற்றச்சாட்டு!

சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை உயர்வினால், அரசாங்கம் சுமார் 7.1 பில்லியன் ரூபா மேலதிக வருவாயைப்...

19 9
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விநியோகத்திற்கு இந்தியாவிடம் கோரிக்கை: வேண்டுகோள் பரிசீலனை!

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய அண்டை நாடுகள் தங்களின் எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக...