india
செய்திகள்இந்தியா

இந்தியாவில் தொடரும் கொலைகள்…..

Share

விவசாயிகளால் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தின் அருகே இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்படுள்ளது.

இந்தியாவின் அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் உள்ள குண்டலியில் இளைஞன் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அச்சடலத்தில் இடதுகை மணிக்கட்டு வெட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை தடுப்பு வேலியில் ஒன்றில் தொங்கவிடப்பட்ட நிலையிலேயே இச்சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிங்கு எல்லையில் மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நடத்திய போராட்ட பகுதிக்கு அருகில் இச்சடலம் மீட்கப்படுள்ளது.

மேலும் இந்த சம்பவம் விவசாயிகள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

அத்துடன் இந்த கொடூர கொலை சீக்கியக் குழுவான நிஹாங்ஸ்களால் நடத்தப்பட்டிருக்குமென சந்தேகிக்கப்படுகின்றது.

சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த் சாஹிப்பை அவமதித்ததாக கூறி, அந்தஇளைஞரை நிஹாங்ஸ் குழு அடித்து கொன்றதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும் சோனிபட் பொலிஸார் அந்த சடலத்தை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இக் கொலை தொடர்பில் பொலிஸ் தரப்பில் எதுவித கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...