Gamini
செய்திகள்இலங்கை

எம்மிடம் பொருளாதார பலம் இல்லை! – நியாயப்படுத்திய அமைச்சர்

Share

“விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்கான ‘பொருளாதார பலம்’ தற்போது அரசாங்கத்திடம் இல்லை.” என அறிவித்து, தொடர் விலையேற்றத்தை நியாயப்படுத்தியுள்ளார் அமைச்சர் காமினி லொக்குகே.

மொட்டுக் கட்சியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, இதன்போது விலை உயர்வு சம்பந்தமாக அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர்.

“பால்மா, சமையல் எரிவாயு உட்பட பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. விலை உயர்வுக்கு அரசாங்கத்தின் தவறு காரணம் அல்ல. உலக சந்தையில் பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன. அதுவே காரணம்.

உலக சந்தையில் விலை அதிகரித்தாலும், எரிபொருள் மற்றும் லிட்ரோ சமையல் எரிவாயு ஆகியவை அதே விலைக்கு கடந்த காலங்களில் வழங்கப்பட்டன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டது.

கொரோனா நிலைமையில் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவதற்கான பொருளாதார சக்தி அரசாங்கத்திடம் இல்லை. அதிக விலைக்கு வாங்கி, குறைந்த விலையில் வழங்கினால் அது பெரும் தாக்கமாக அமையும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சரத் அபேகோன்n
இலங்கை

பதிவி ஏற்கும்போதே ஜனாதிபதியிடம் குறிப்பிட்டேன்.

மத்திய மாகாண ஆளுநர் பதவியிலிருந்து விலகுவதாகத் தெரிவித்து, ஜனாதிபதிக்குத் தான் அனுப்பிய கடிதத்திற்கு இதுவரை எந்தவொரு...

yositha 1
இலங்கை

ஒத்திவைக்கப்பட்டது யோஷிதவின் வழக்கு.

பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு மேல்...

arested 3
இலங்கை

வெளிநாட்டு குண்டுகளுடன் ஒருவர் கைது – கைப்பற்றப்பட்ட ஆயுத தொகுதி !

யக்கல பிரதேசத்தில் வைத்து, ராகமவைச் சேர்ந்த 42 வயதுடைய நபரொருவர் 2 கையெறி குண்டுகள் மற்றும்...

arrest warrant d
இலங்கை

முக்கிய நபர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு.

நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ண உள்ளிட்ட...