lakshman kiriella
செய்திகள்இலங்கை

உரிமைகளை பாதுகாத்தாலே சர்வதேசத்தை வெல்லலாம்!!

Share

“நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தால் மாத்திரமே இந்த அரசாங்கத்தால் சர்வதேசத்தை வெல்ல முடியும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நாட்டில் ஜனநாயகம் பலப்படுத்தப்பட்டது. நல்லாட்சி மலர்ந்தது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டன.

ஆனால் அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக இந்நிலைமை தற்போது மாற்றப்பட்டுள்ளது. எல்லா அதிகாரங்களும் நிறைவேற்று ஜனாதிபதியின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் ஜனநாயகம் சவாலுக்குட்படுத்தப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இப்போது தொடர் தோல்விகள் ஏற்படுவதற்கும் இந்த 20 திருத்தச் சட்டமும் காரணமாகும். எனவே, ஜனநாயகத்தை நிலைநாட்டி, மனித உரிமைகளை பாதுகாத்தால் மாத்திரமே சர்வதேசத்தை வெல்லமுடியும்.” – என்றார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Elephant Tusks 1
இலங்கை

யானைத்தந்தங்களுடன் நிலவெளியில் ஒருவர் கைது.

  சட்டவிரோதமான முறையில் யானைத் தந்தங்களை வீட்டில் வைத்திருந்த நபரொருவர் திருகோணமலை- நிலாவெளி பகுதியில் விசேட...

low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...