32 8
இலங்கைசெய்திகள்

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : அதிருப்தியில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்

Share

இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி : அதிருப்தியில் அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்

இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் மைதானத்தில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய பந்து பரிமாற்றம் குறித்து அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸின்போது, சர்ச்சைக்குரிய பந்து மாற்றம் வர்ணனையாளர்கள் மற்றும் வீரர்களிடமிருந்து விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

41வது ஓவருக்குப் பின்னர், இங்கிலாந்து அணியினரின் தேய்ந்துபோன பந்தை மாற்றுவதற்கான கோரிக்கையை நடுவர் ஏற்றுக்கொண்டபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேசன் வுட், இது ஒரு மோசமான செயல் என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை அணி 24 ஓட்டங்கள்; முன்னிலையுடன் 4 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை எடுத்திருந்தபோது சர்ச்சைக்குரிய பந்து பரிமாற்றம் நடந்தது,

குறித்த நேரத்தில் பந்து பரிமாற்றம் கோரப்பட்டபோது, அதேபோன்ற தேய்ந்த பந்தே பரிமாற்றம் செய்யப்பட்டிருக்கவேண்டும்.

எனினும் புதிய பந்தை நடுவர்கள் அனுமதித்தனர். இதன் காரணமாகவே இலங்கை அணியின் விக்கட்டுக்கள் இழக்கப்பட்டதாக பலரும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
world 117
செய்திகள்அரசியல்இலங்கை

தையிட்டி விகாரை பகுதி காணி விடுவிப்பு: உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு!

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதிகளில் காணி உள்ளவர்கள், தமது காணி உறுதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன்...

world 116
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குருநாகலில் செங்கல் ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்து விபத்து: சாரதி உட்பட இருவர் பலி!

குருநாகல் மாவட்டம், வாரியப்பொல – நாரம்மல வீதியின் நெலும்புவ, கொலமுணுஓயா பகுதியில் இன்று (ஏப்ரல் 12,...

world 115
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் புதையல் வேட்டை: அதிரடிப்படை அதிகாரி உட்பட மேலும் இருவர் கைது!

மட்டக்களப்பு, கரடியனாறு பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மகா ஓயா விசேட அதிரடிப்படை...

world 114
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் இளவாலையில் அதிரடி: வீடொன்றில் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு!

யாழ்ப்பாணம், இளவாலை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து இன்று (ஏப்ரல் 12, 2026)...