19 15
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் கைது செய்யப்படுவார்! அனுர உறுதி

Share

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் கைது செய்யப்படுவார்! அனுர உறுதி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரனை கைது செய்து இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளுமாறு அப்போது மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன் கோப் குழு விசாரணைகளின் போது இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலமொன்றை அளித்திருந்தார் எனவும் இதனால் அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன் மற்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...

04 22
உலகம்செய்திகள்

மழைக்கும் மத்தியிலும் ஈரான் தலைநகரில் பிரம்மாண்டப் போராட்டம்: உச்சத் தலைவருக்கு ஆதரவு!

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்துள்ள போர் இன்று (மார்ச் 24, 2026)...

03 23
செய்திகள்இலங்கை

சீமெந்து விலை 2,250 ரூபாவாக அதிகரிப்பு: கட்டுமாணத் துறை மேலும் நெருக்கடி!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலையேற்றம் காரணமாக, கட்டுமாணப் பொருட்களின் விலைகள் மீண்டும்...