19 15
இலங்கைசெய்திகள்

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் கைது செய்யப்படுவார்! அனுர உறுதி

Share

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் கைது செய்யப்படுவார்! அனுர உறுதி

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரனை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தாம் ஜனாதிபதியாக பதவி ஏற்றதன் பின்னர் சிவப்பு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள அர்ஜூன் மகேந்திரனை கைது செய்து இலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கலை மேற்கொள்ளுமாறு அப்போது மத்திய வங்கிக்கு பொறுப்பான அமைச்சர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன் கோப் குழு விசாரணைகளின் போது இந்த விடயம் தொடர்பில் வாக்குமூலமொன்றை அளித்திருந்தார் எனவும் இதனால் அவர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் தெரிவித்துள்ளார்.

அர்ஜூன் மகேந்திரன் மற்றும் ரணில் விக்ரமசிங்கவிடம் நீதிமன்றின் ஊடாக விசாரணை நடத்தப்படும் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
gettyimages 1013313124
உலகம்செய்திகள்

மூதாட்டியின் உடலுடன் விமானத்தில் ஏற முயன்ற பிரித்தானிய குடும்பம்: கேட்விக் விமானத்தில் நிகழ்ந்த பரபரப்பு!

ஸ்பெயினிலிருந்து லண்டன் நோக்கிப் புறப்படவிருந்த ஈசி ஜெட் (EasyJet) விமானத்தில், உயிரிழந்த மூதாட்டி ஒருவரின் உடலை...

mandaitivu
செய்திகள்அரசியல்இலங்கை

மண்டைதீவு கிரிக்கெட் மைதானத் திட்டம் சட்டவிரோதமானது – ஜனாதிபதியிடம் WNPS அவசர முறைப்பாடு!

யாழ்ப்பாணம் மண்டைதீவில் அமைக்கப்படவுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் விளையாட்டு வளாகத் திட்டம், சூழலியல் ரீதியாகப்...

human rights
செய்திகள்அரசியல்இலங்கை

பாடசாலைகள் எதேச்சதிகாரமாகச் செயற்பட முடியாது – விருது வழங்கும் சர்ச்சை குறித்து மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை!

இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றின் விருது வழங்கும் நிகழ்வின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவம் தொடர்பில்...

574922858 1463456808471913 8345646138916257300 n
செய்திகள்அரசியல்இலங்கை

டிட்வா நிவாரணம்: இதுவரை 3 இலட்சம் வீடுகளுக்கு தலா 25,000 ரூபாய் வழங்கீடு!

‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சீரமைப்பதற்காக அரசாங்கத்தால் வழங்கப்படும் 25,000 ரூபாய் ஆரம்பக் கொடுப்பனவு, இதுவரை...