20 14
இலங்கைசெய்திகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாரதி! விசாரணையில் வெளியான காரணம்

Share

கொடூரமாக கொலை செய்யப்பட்ட சாரதி! விசாரணையில் வெளியான காரணம்

பத்தரமுல்லை, அக்குரேகொட, அருப்பிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று (18) இடம்பெற்றதாகவும் பணத் தகராறு காரணமாகவே குறித்த நபர் கொலை செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டவரின் சடலம் அப்பகுதியில் உள்ள வாகன பளுதுபார்க்கும் நிலையம் ஒன்றுக்கு அருகில் கிடந்துள்ளது.

தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் கொலை செய்த சந்தேகநபர் கொஸ்வத்தை பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
Featuredvdfv
இலங்கை

ஆபத்தான ஆயுதங்களுடன் இரத்மலானையில் பலர் கைது!

இரத்மலானை கொனா கோவில பகுதியில் 3 வாள்கள், 1 கோடரி, 3 கத்திகள் மற்றும் உள்நாட்டில்...

dead body 2
இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்!

இன்றைய தினம், யாழ்ப்பாணம் – நாரந்தனை பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக...

bus bike accident
இலங்கை

சற்று முன்னர் இடம்பெற்ற கோர விபத்து – பலியான வங்கி ஊழியர்!

அனுராதபுரம் – பாதெனிய வீதியில் மோட்டார் சைக்கிளும் தனியார் பேருந்தும் மோதி ஏற்பட்ட கோர விபத்தில்,...

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள்
இலங்கை

உயர் அதிகாரிகளுக்கு திடீரென வழங்கப்பட்ட இடமாற்றங்கள்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு அமைவாக, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கு இடமாற்றங்களை வழங்க பொலிஸ்...