30
இலங்கைசெய்திகள்

இலங்கை- இந்திய படையினரின் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

Share

இலங்கை- இந்திய படையினரின் கூட்டுப்பயிற்சி ஆரம்பம்

இந்தியா – இலங்கை கூட்டு இராணுவப் பயிற்சியான மித்ரா சக்தி இலங்கையின் மாதுரு ஓயாவில் உள்ள இராணுவ பயிற்சியகத்தில் ஆரம்பமாகியுள்ளது

இந்த பயிற்சி ஆகஸ்ட் 25ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

106 வீரர்களைக் கொண்ட இந்தியக் குழுவினர் இலங்கை இராணுவத்துடனான கூட்டு பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.

இந்த பயிற்சி 2024 ஆகஸ்ட் 12 முதல் 25 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் மித்ரா சக்தி என்பது இந்தியாவிலும் இலங்கையிலும் மாறி மாறி ஆண்டுதோறும் நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும்.

இதன் கடைசி பதிப்பு நவம்பர் 2023 இல் புனேயில் நடத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபைக் கட்டளையின் ஏழாவது அத்தியாயத்தின் கீழ் துணை மரபுசார் சூழ்நிலையில் கிளர்ச்சி எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், இரு தரப்பினரின் கூட்டு இராணுவ திறனை மேம்படுத்துவதே இந்தக் கூட்டுப் பயிற்சியின் நோக்கமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....