24 669b2e6cac038
இலங்கைசெய்திகள்

தெஹிவளை பகுதியில் களனி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் உட்பட ஐவர் கைது

Share

தெஹிவளை பகுதியில் களனி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் உட்பட ஐவர் கைது

தெஹிவளைகாலி வீதியில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனமொன்றில் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் பெண் ஒருவர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த அலுவலகத்தை இரும்புக்கம்பிகளால் தாக்கி சேதப்படுத்தி 35 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை கொள்ளையிட்டுள்ளதாக தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களினால் திருடப்பட்ட பொருட்களிலிருந்து இரண்டு மடிக்கணினிகள் மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

இத்தாலி விசா பெறுவதற்காக நால்வர் பணம் செலுத்தியிருந்த நிலையில், விசா வழங்கப்படவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில், திடீரென நிறுவனத்திற்குள் புகுந்த சிலர் இரும்புக் கம்பியால் தாக்கி சேதம் விளைவித்து 2000 ஸ்ரெலிங் பவுண்ட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் களனி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 25-33 வயதுடையவர்கள் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில்,தெஹிவளை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் அனுராத ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Share
தொடர்புடையது
Tamil News lrg 4119716
செய்திகள்உலகம்

மதுரோவை எங்களிடம் ஒப்படையுங்கள்: அமெரிக்காவிடம் ஆர்ஜன்ரீனா உத்தியோகபூர்வக் கோரிக்கை!

மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக, அமெரிக்காவால் அண்மையில் கைது செய்யப்பட்ட வெனிசுலா...

download
செய்திகள்உலகம்

எப்ஸ்டீன் ஆவணங்களால் அதிரும் பிரிட்டன்: மன்னிப்பு கோரினார் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்!

மறைந்த அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான லட்சக்கணக்கான ஆவணங்களை அமெரிக்க நீதித்துறை வெளியிட்டதைத்...

Makadure Madush 1200px 24 11 07
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மஹரகமவில் பரபரப்பு: காவல்துறை கான்ஸ்டபிளைத் தாக்கிய மாகந்துரே மதுஷின் மனைவி மற்றும் மகன் கைது!

கொலை செய்யப்பட்ட பிரபல பாதாள உலகத் தலைவன் மாகந்துரே மதுஷின் மனைவி மற்றும் அவரது 21...

capture 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பிள்ளைகளின் கல்வி உரிமையை பறிக்காதே: ஜனாதிபதி செயலகத்திற்கு முன் ஆசிரியர்கள் பாரிய போராட்டம்!

தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களின் பிள்ளைகளை அந்தந்த பாடசாலைகளிலேயே அனுமதிக்கும் சலுகை...