24 669b596a691bc
இலங்கைசெய்திகள்

விடுதலை புலிகளின் தலைவரை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பம்: வைத்தியர் அர்ச்சுனா நெகிழ்ச்சி

Share

விடுதலை புலிகளின் தலைவரை சந்திக்க கிடைத்த சந்தர்ப்பம்: வைத்தியர் அர்ச்சுனா நெகிழ்ச்சி

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரை சந்திக்க தனக்கு வாய்ப்பு கிடைத்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தை என் வாழ்வில் மறக்க முடியாது எனவும், சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

தென்னிலங்கை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்ட விடயத்தை வெளிப்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“பழைய காயங்களை மீளத் தொடாதீர்கள் அதில் இரத்தம் நிரம்பி இருக்கின்றது. அவ்வாறு தொட்டால் அதிலிருந்து இரத்தம் தான் பெருக்கெடுக்கும்.

இலங்கைக்குள் இந்தநிலை தொடருமானால் நாம் எவ்வளவு ஆண்டுகள் சென்றாலும் எமது நாட்டை முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்ல முடியாது.

தமிழ் மக்களுடைய பழைய பாதைகளை நாம் ஒருபோதும் மறக்கப்போவதில்லை.

இதேவேளை எனக்கு போராட்ட தமிழீழ வரலாறு பற்றிய பரந்தளவான அறிவு இல்லாவிட்டாலும் போராட்டகால நிகழ்வுகள் பற்றியும் அவர்களது வலியும் எனக்கு புரியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...

Pillayan
இலங்கை

இன்றைய தினம் பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஐந்து கொலைச் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்...

Ranil Namal
இலங்கை

ரணிலுடன் நாமல் பேசியது என்ன?

அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராஜபக்ச தரப்பினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறன. இந்த நடவடிக்கைகளுக்கு,...

Fire Breaks
இலங்கை

களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீ – துண்டிக்கப்பட்ட மின்சாரம்.

  களுத்துறை மாவட்ட செயலகத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இன்று காலை சுமார் 8.30...