BO scaled
செய்திகள்இலங்கை

குருநகர் மீனவர் மீது இந்திய படகு தாக்குதல்!

Share

இலங்கை கடற்தீவில், இந்திய இழுவைப் படகு, குருநகர் படகு மீது மோதியதுடன், படகில் இருந்தோர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடிப் படகு, குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு, அப்படகில் வந்தவர்கள், மற்றைய படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று 12 மணியளவில் கடலுக்குச் சென்றிருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை கற்கடதீவு கடல் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர், இலங்கை மீன்பிடிப் படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்தியதோடு, படகில் இருந்த மூவரையும் தாக்கி கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதனால் குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு, படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை ஒதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு, குருநகர் மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....