BO scaled
செய்திகள்இலங்கை

குருநகர் மீனவர் மீது இந்திய படகு தாக்குதல்!

Share

இலங்கை கடற்தீவில், இந்திய இழுவைப் படகு, குருநகர் படகு மீது மோதியதுடன், படகில் இருந்தோர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவைமீன்பிடிப் படகு, குருநகர் பகுதி மீனவ படகினை நேராக மோதி சேதப்படுத்தியதோடு, அப்படகில் வந்தவர்கள், மற்றைய படகில் இருந்த குருநகர் மீனவர்களை கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநகர் பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலுக்காக ஒரு படகில் மூவர் நேற்று 12 மணியளவில் கடலுக்குச் சென்றிருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் இலங்கை கற்கடதீவு கடல் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த இந்திய மீன்பிடி ரோலர், இலங்கை மீன்பிடிப் படகினை நேராக மோதி படகினை சேதப்படுத்தியதோடு, படகில் இருந்த மூவரையும் தாக்கி கடலில் தூக்கிப் போடும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், இதனால் குறித்த படகு முழுமையாக சேதம் அடைந்துள்ளதோடு, படகில் பயணித்தவர்கள் காயங்களோடு கரை ஒதுங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்திற்கு, குருநகர் மீனவ சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
05 17
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தனியார் பஸ் சேவைகளை முறைப்படுத்தக் கோரிக்கை: அத்தியாவசியமற்ற நேரங்களில் சேவைகளைக் குறைக்கத் திட்டம்

நாட்டில் நிலவும் சூழலைக் கருத்திற்கொண்டு, தனியார் பஸ்களின் பயண நேரங்களை முறைப்படுத்துமாறும், பயணிகள் வருகை குறைவாக...

02 16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி சேமிப்பு நடவடிக்கை: ஒவ்வொரு புதன்கிழமையும் பொது விடுமுறையாக அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு,...

01 16
செய்திகள்உலகம்

காபூல் மருத்துவமனை மீது பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்: 400 பேர் உயிரிழப்பு என தலிபான் அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மருத்துவமனை ஒன்றின் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் 400...

21 13
செய்திகள்இலங்கை

எரிபொருள் QR குறியீட்டிற்கான போலி இணையதளங்கள் குறித்து எச்சரிக்கை

அரசாங்கத்தின் அதிகாரபூர்வ எரிபொருள் QR குறியீட்டைப் பெறுவதற்கான இணையதளத்தைப் போன்று போலியாக வடிவமைக்கப்பட்ட இணையதளங்கள் குறித்து...