17
இலங்கைசெய்திகள்

வெளியாகிய விசேட வர்த்தமானி: சஜித் தரப்பு குற்றச்சாட்டு

Share

வெளியாகிய விசேட வர்த்தமானி: சஜித் தரப்பு குற்றச்சாட்டு

இலங்கை கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளின் சேவை காலத்தை மேலும் 8 வருடங்கள் நீடிப்பதற்கான விசேட வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல(Lakshman Kiriella) குற்றம் சுமத்தியுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று (10) கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை கூறியுள்ளார்.

”இருபதுக்கு 20 உலகக் கிண்ண போட்டிகள் நடைபெற்று வரும் காலப்பகுதியில் திடீரென இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, விளையாட்டுத்துறை அமைச்சரினால் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானியின் ஊடாக, கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் செயலாளர் 8 வருடங்கள் பதவி வகித்து அந்த பதவிகளை விட்டு வெளியேறியதன் பின்னர், மேலும் 16 வருடங்கள் நிறைவேற்று உறுப்பினர்களாக பணியாற்ற முடியும் என கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், எங்களது அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நீக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 86
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பூசா சிறையில் கொலைச் சதி? மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை!

பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திராவின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பூசா உயர் பாதுகாப்புச் சிறையில்...

world 85
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபாயகரமான வாகன ஓட்டுநர்களைப் பிடிக்க புதிய வாட்ஸ்அப் எண்: வீடியோ ஆதாரங்களை அனுப்பக் காவல்துறை வேண்டுகோள்!

இலங்கையில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்தவும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு எதிராக உடனடி...

world 83
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கைக்குக் கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் அதிகரிப்பு!

இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2026 மார்ச் மாதத்தில் புலம்பெயர்...