24 66653544c6527
இலங்கைசெய்திகள்

அழைத்தார் மோடி : புதுடெல்லி பறந்தார் ரணில்

Share

அழைத்தார் மோடி : புதுடெல்லி பறந்தார் ரணில்

இந்தியப் பிரதமராக மூன்றாவது தடவையாக பதவியேற்கவுள்ள நரேந்திர மோடி(Narendra Modi)யின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe )சற்றுமுன்னர் புதுடெல்லிக்கு பயணித்துள்ளார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், அதிபர் ரணில் இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

இன்று (09) மாலை டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் பிரதமர் மோடி பதவியேற்கிறார், அத்துடன் புதிய அமைச்சரவை உறுப்பினர்களும் பதவியேற்கவுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு 3 முறை பிரதமராக பதவி வகிக்கிறார் மோடி.

இதில் ஆயிரக்கணக்கான அரசு தலைவர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு(Droupadi Murmu) பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் ராஷ்டிரபதி பவனில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்காக டெல்லி அதிக உஷார் நிலையில் இருப்பதால், டெல்லி காவல்துறையின் SWAT மற்றும் NSG இன் கொமாண்டோக்கள் முக்கிய இடங்களைச் சுற்றி நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

44 நாட்கள் 7 கட்டங்களாக நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 2
சினிமாசெய்திகள்

ஜனநாயகன் கடைசி படம் இல்லையா? விஜய் பதிலால் குஷியில் ரசிகர்கள்

இன்று நடிகர் விஜய்யின் பிறந்தநாள் என்பதால் அதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அவர் ஏற்கனவே அரசியல்...

Untitled 1 1
சினிமாசெய்திகள்

விஜய்க்காக த்ரிஷா போட்ட பதிவு.. வைரலாகும் போட்டோவை பாருங்க

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள் என்பதால் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்....

19 1
உலகம்செய்திகள்

டொனால்ட் ட்ரம்பின் நீண்ட கால திட்டம்! குறி வைக்கப்பட்டுள்ள ஈரானின் முக்கிய இடங்கள்

ஒன்று அமைதி, இல்லாவிட்டால் ஈரானுக்கு அழிவு. ஈரானில் இன்னும் பல முக்கிய இடங்களை குறி வைத்துள்ளோம்...

18 2
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கான உணவு கட்டணத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தம்

நாடாளுமன்ற ஊழியர்களுக்கு விதிக்கப்படும் உணவு கட்டணங்களை திருத்தியமைக்க நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளது. நாடாளுமன்ற குழு கூடியபோது...